;
Athirady Tamil News

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!

0

தெற்கு லெபனானில் (Lebanon) இரண்டு நாட்களில் பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தரவுகள் தெரிவிக்கின்றன.

வியாழன் (24) அன்று தெற்கு லெபனானில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்றையதினமும் (25) மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டடுள்ளனர் என்று IDF தெரிவித்துள்ளது.

தரைவழி தாக்குதல்
கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா குழுவை ஒழிக்க தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இஸ்ரேல் (Israel) இவ்வாறான இழப்புக்களை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த வருடம் ஒக்டோபர் 7 முதல் மொத்தம் 890 இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெபனான் உயிரிழப்புகள்

அத்தோடு, இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில், 2,500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 12,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், போரின் போது சுமார் 1.2 மில்லியன் லெபனானியர்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 63,500 இஸ்ரேலியர்கள் எல்லையின் மறுபுறம் வடக்கு இஸ்ரேலில் இடம்பெயர்ந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.