;
Athirady Tamil News

பிரித்தானியாவை கடும் பனிப்பொழிவால் தாக்கவுள்ள Arctic blast

0

பிரித்தானியாவில் நவம்பர் 6 முதல் 8 வரை கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்படும் என்று காலநிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

-2°C வரை தாழ்ந்த வெப்பநிலையை எதிர்பார்க்கலாம், மேலும் டெவான், ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாகும்.

குறிப்பாக வடமேற்கு ஸ்காட்லாந்தில், விக்க், இன்வர்நெஸ், மற்றும் அபர்டீன் ஆகிய இடங்களில் மணிக்கு 2 செ.மீ. அளவிற்கு பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில், செயரிட்ஜியன் (Wales) பகுதியில் காற்றின் குளிர் தாக்கம் -4°C வரை குறையலாம்.

கேர்‌ங்கார்ம்ஸ் தேசிய பூங்கா (Scotland) பகுதியில் வெப்பநிலை -10°C வரை சரியலாம். இதற்கான முக்கிய காரணமாக ஆர்க்டிக் பகுதியிலிருந்து வீசும் காற்று மற்றும் ஜெட் ஸ்ட்ரீம் கருதப்படுகிறது.

மேலும், ஹாலோவீன் வாரத்திலேயே சில இடங்களில் பனிப்பொழிவு தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெர்ஃபோர்ட்ஷைர், லிங்கன்‌ஷைர் மற்றும் கம்ப்ரியா ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படலாம்.

வானிலை அலுவலகம் தெரிவித்த பருவநிலை கணிப்பின்படி, ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 7 வரை சில இடங்களில் பனி, பனிமூடுபனி, மற்றும் மழை ஏற்படலாம். தெற்குப் பகுதிகளில் உலர்ந்த காலநிலை நீடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.