;
Athirady Tamil News

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்

0

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு விஜய் வருகை தந்துள்ளார்.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கட்சி பாடலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பாடலுக்கு பின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. மேடையில் பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கலைநிகழ்ச்சிகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கேட்டு ஆரவாரம் செய்து நடனமாடி வருகின்றனர்.

மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விக்கிரவாண்டி சாலையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரத்துடன் மாநாடு நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வாழ்த்தி தொண்டர்கள் உற்சாக முழக்கம் எழுப்பினர்.

விஜய்யின் பெற்றோர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் மாநாட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். மாநாட்டில் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் உள்ளனர். அதேசமயம் பெண்கள் மற்றும் முதியவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சரியாக 4 மணியளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தார். ஆரவாரத்துக்கு மத்தியில் தொண்டர்களை நோக்கி இருகரம் கூப்பி விஜய் வணக்கம் செலுத்தினார். மாநாட்டில் தொண்டர்கள் அளித்த கட்சித் துண்டை அதன் தலைவர் விஜய் அணிந்து கொண்டார். மேலும் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.