;
Athirady Tamil News

காசாவில் அதிகாலையில் வெடித்த குண்டு: 3 இஸ்ரேலிய படை வீரர்கள் உயிரிழப்பு

0

வடக்கு காசாவில் நடந்த சண்டையின் போது 3 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

3 இஸ்ரேலிய வீரர் உயிரிழப்பு

வடக்கு காசாவின் ஜபாலியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டையில் 3 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பகுதியில் ஹமாஸின் கட்டுப்பாட்டில் கடைசியாக செயல்பட்டு வந்த மருத்துவமனையை கைப்பற்றும் நோக்கில் நடைபெற்ற சண்டையில் மூவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியான தகவல்களின் அடிப்படையில், பெட்டா திக்வாவை சேர்ந்த கேப்டன் பராக் இஸ்ரேல் சாகன்(22), ஷோம்ரத் பகுதியை சேர்ந்த இடோ பென் ஸ்வி(21) மற்றும் ஜெருசலேம் பகுதியை சேர்ந்த ஹில்லெல் ஒவாடியா(22) ஆகிய 3 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த மூவரும் 460வது கவசப் படையின் 196 வது பட்டாலியனில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உயிரிழந்த மூவரும் வடக்கு காசாவில் அதிகாலையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயத்தில் காசாவில் மீது இஸ்ரேல் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.