மீண்டும் ஆரம்பமாகும் காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது, நாளை மறுதினம் புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
நாகபட்டினத்தில் இருந்து புதன்கிழமை காலை 7.30 மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.
இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.