உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழில் கட்டுப்பணம் செலுத்திய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியதாக இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.