யாழில் மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்கள் மாயம்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து தோமஸ் டக்ளஸின் படகில் கடந்த 15 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இரண்டு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால் அவர்களில் எவரும் இன்னும் கடலுக்குத் திரும்பவில்லை என யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.