துருக்கியில் வெடிக்கும் போராட்டம்: பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கை

துருக்கியில் உள்ள பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பயண அறிவிப்பு எச்சரிக்கைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அந்தல்யா மற்றும் இஸ்தான்புல் போன்ற பிரபலமான துருக்கி சுற்றுலா தலங்களுக்கு விடுமுறைக்கு செல்ல திட்டமிடும் அல்லது தற்போது அங்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய சுற்றுலா பயணிகள், சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) அறிவித்துள்ளது.
Turkey’s Interior Ministry: Turkish police detained 1,133 people during the protests.
Police also arrested 956 individuals accused of “inciting unrest through social media.” pic.twitter.com/ekg2b2o1QO
— NEXTA (@nexta_tv) March 24, 2025
போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கை
புதிய பயண அறிவிப்பில், மார்ச் 24 ஆம் திகதி, இஸ்தான்புல் மற்றும் பிற துருக்கி நகரங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து FCDO எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த போராட்டங்கள் வன்முறையாக மாற வாய்ப்புள்ளது என்றும், உள்ளூர் காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர் என்றும் இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது.
பிரித்தானிய குடிமக்களுக்கு பயண வழிகாட்டுதல்களை வழங்கும் FCDO, சுற்றுலா பயணிகளுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
- உள்ளூர் ஊடகங்களில் வரும் செய்திகளை தொடர்ந்து கவனியுங்கள்.
- சாத்தியமான இடையூறுகளைத் தவிர்க்க பயண திட்டங்களை கவனமாக வகுக்கவும்.
- கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டப் பகுதிகளைத் தவிர்க்கவும்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்குள்ள தூதரகங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன.
துருக்கியில் உள்ள அனைத்து இங்கிலாந்து சுற்றுலா பயணிகளும் போராட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டம் தொடங்கினால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் FCDO அறிவுறுத்தியுள்ளது.
மேலும், துருக்கி-சிரியா எல்லைக்கு 10 கிமீ தொலைவில் உள்ள பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலி மதுபானம் குறித்த எச்சரிக்கை
பிப்ரவரியில் வெளியிடப்பட்ட ஒரு தனி ஆலோசனையில், அங்காரா மற்றும் இஸ்தான்புல் உட்பட துருக்கியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் மதுபானங்கள் மற்றும் போலி மதுபானங்களை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் FCDO எச்சரித்துள்ளது.