;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வரவிருந்த விமானத்தில் ஏற்பட்ட பதற்றம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் நபரொருவர் நுழைந்ததால் அங்கு சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26-04-2024) இடம்பெற்ற இச் சம்பவத்துடன் தொடர்புடைய…

சிறிலங்கா அதிபர் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

சிறிலங்கா அதிபர் அலுவலகத்தில் பதவி வகிப்பதாகக் கூறி போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து மக்களை ஏமாற்றி பணம் பெறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா…

பதவி விலகினார் வியட்நாம் சபாநாயகர்! பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டு

வியட்நாம் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் வூங் டின் ஹியூ நேற்று  (27) பதவி விலகியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கருத்தில் கொண்டு, தாமாகவே குறித்த பதவியில் இருந்து விலக வூங் டின் ஹியூ…

சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே…

காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியொருவர் போகும் வழியிலேயே இன்று (28) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே…

சுகாதாரமற்ற நகரமாக மாற்றமடையும் நுவரெலியா

இலங்கையில் (Sri Lanka) பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா (Nuwara Eliya) முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் நிலையில் குப்பைகளை கண்ட இடங்களில் வீசிச் செல்வதால் நகரம் அசுத்தமடைந்துள்ளது. குறிப்பாக நகரில் போதிய குப்பைத் தொட்டிகள்…

அமெரிக்காவில் கோர விபத்து: 3 இந்தியர்கள் பலி!

அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்தியாவைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் குஜராத் மாநிலம், அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதா பென்…

சுதந்திரக்கட்சியின் உண்மையான பிரதிநிதிகள் யார்..! மல்வத்துபீடத்திற்கு எழுந்த சந்தேகம்

சிறி லங்கா சுதந்திரக் கட்சிக்கு மூன்று பிரிவினர் உரிமை கோருவதால், அதன் உண்மையான பிரதிநிதிகள் யார் என்ற கேள்வி மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜேதாச…

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) ஹெரோயின் மற்றும் 70 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு…

இலங்கை மக்களுக்கு வரி தொடர்பில் வெளியான பேரிடியான செய்தி!

நாட்டில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் ரஞ்சித்…

இலங்கையில் அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள சாரதிகளுக்கான வெற்றிடங்கள்

இலங்கையின் (Sri Lanka) அரசு மருத்துவமனை அமைப்பில் அவசர நோயாளர் காவு வாகனங்களின் சாரதிகளுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அரசு சுகாதார சேவை சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. அவசர நோயாளர் காவு வாகனங்களின் சாரதிகளுக்கு கிட்டத்தட்ட 300 வெற்றிடங்கள்…

முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஓராண்டில் மட்டும் 65,000 பணியாளர்கள் பணி நீக்கம்……

இந்தியாவின் மூன்று முக்கிய மென்பொருள் நிறுவனங்களில் ஓராண்டில் மட்டும் சுமார் 65 ஆயிரம் பணியாளர்கள் குறைந்துள்ளனர். உலக நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவை வழங்குவதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. சுமார் 21 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு…

வெடித்து சிதறிய செல்போன் ; இளம் பெண் பலி

செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் விசாரணை உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள…

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம்

யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள 15…

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான…

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை (26.04) நெடுந்தீவு பிரதேசசெயலகத்தில்…

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா!

உக்ரைனுக்கு நீண்ட கால இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் குறித்த இராணுவ ஆயுத உதவியானது ஆறு பில்லியன் டொலர் பெறுமதியானது என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு…

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவியைக் காணவில்லை

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடு திரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை சாவகச்சேரியில் அமைந்துள்ள…

பருத்தித்துறையில் கிருமித் தொற்றால் குடும்பஸ்தர் மரணம்

உடலில் கிருமித் தொற்று ஏற்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புனித நகர்ப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோணேஸ்வரராசா நிசாந்தன் (வயது-34) என்பவரே…

அமெரிக்காவில் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனம்: பறிபோன கருப்பினத்தவர் உயிர்

அமெரிக்கா ஓஹியோவில்(Ohio) காவல்துறையினர் தாக்கியதில் கருப்பினத்தவர் ஒருவர் மரணமடைந்துள்ள காணொளியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவில் கருப்பின மக்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.…

பீகாரில் கடத்தப்பட்ட 95 சிறுவர்கள் உத்தரப்பிரதேசத்தில் மீட்பு : கடத்தப்பட்டது ஏன்? –…

பீகாரில் இருந்து உரிய ஆவணங்களின்றி அழைத்துவரப்பட்ட 95 சிறுவர்களை உத்தரப்பிரதேச குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் மீட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் இருந்து 95 சிறுவர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூர் பகுதிக்கு, உரிய ஆவணங்கள் இன்றி…

இரத்தத்தால் பிரபலமான வேம்பையர் பேஷியல்: எச்ஐவியை பரப்பும் கொடூரம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில்(Spas New Mexico USA) வேம்பையர் பேஷியல்(Vampire Facial) செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால்(HIV) பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. வேம்பையர் பேஷியலானது காஸ்மெட்டிக் முறையில்…

எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல்

இலாப வரம்பில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும்விதமாக எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியுள்ளதாக, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி சானக்க(D.V. Chanaka) தெரிவித்துள்ளார். இதன்படி…

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி…

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது…

வடக்கில் 763 பேர் அரச சேவையில் இருந்து விலகல்

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 763 அரச உத்தியோகஸ்தர்கள் தங்களது சேவைகளில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் ஐந்தாண்டு விடுமுறைக்கு விண்ணப்பித்து , 720 பேர் விலகியுள்ளனர். 36 பேர் எந்தவொரு அறிவித்தாலும் இல்லாமல் சேவையில் இருந்து…

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்…

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இதன்போது வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் வான் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே…

ஆறு நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி தடைகளை நீக்கிய இந்தியா

இலங்கை உட்பட ஆறு நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நாடுகள் அதன்படி, பங்களாதேஷ்,…

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாடு - நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல்…

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரிய ஊழியர் பற்றாக்குறை

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் பாரியளவு ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குறித்த அலுவலகத்தின் செற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,400 பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 1,400…

சொகுசு வாகனங்களை பராமரிக்க முடியாமல் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்களால் சொகுசு வாகனங்களைப் பராமரிக்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறக்குறைய நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணங்களுக்கு குறைந்த விலையில் உள்ள சிறிய…

இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3 வீதத்தால் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது. புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் 'வருடாந்திர பொருளாதார…

நடுவானிலிருந்து கீழே விழுந்த விமானத்தின் அவசரகால கதவு: பீதியடைந்த பயணிகள்

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானமொன்றின் அவசரகால கதவு நடுவானில் இருந்து கீழே விழுந்ததில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜோன் எப்.கென்னடி சர்வதேச விமான…

தமிழகத்தில் வீசப்போகும் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என…

ரணிலுக்கு இடமளிப்போம்: மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) வெற்றி பெறச் செய்யும் நோக்கில் "ரணிலுக்கு இடமளிப்போம்" எனும் தொனிப்பொருளில் மோட்டார் சைக்கிள் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, ஹுணுப்பிட்டிய கங்காராமை…

பல்கலை கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்குவது மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரங்கள் அமைச்சு உபகுழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்போது, இந்த…

இலங்கையில் வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்

சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி நாளிதழ்களில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.…