;
Athirady Tamil News

ஏற்றிச்செல்ல மறுத்ததால் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர்!

சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் ஆடியகம பிரதேசத்தில் மோட்டார் நேற்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் குருணாகல் - ரஸ்நாயக்க…

இணையவழி வீசா தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கான வீசா விண்ணப்பங்களை இணையவழி முறையின் ஊடாக சமர்பிப்பதற்கு அங்கீகாரம் பெற்ற பிரதிநிதி ஒருவரை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை…

கரோனா காலத்தில் எம்பிபிஎஸ் சோ்ந்தவா்களுக்கு மறுதோ்வுக்கு வாய்ப்பு

சென்னை: கரோனா காலத்தில் (2020-21) எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்ந்தவா்கள் முதலாம் ஆண்டு தோ்வில் தோ்ச்சி பெறாதபட்சத்தில் அவா்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய மருத்துவ…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்

விவசாய நிலங்களுக்கான ஏக்கர் வரி அறவிடுதலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அபிவிருத்தி அதிகாரிகளுடன் இன்று (12) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில்…

சர்க்கரை நோய் மற்றும் உடல் எடையை குறைக்க வேண்டுமா? மூலிகை தேநீர் அற்புதம்

இன்று பெரும்பாலான மக்கள் தேநீர் அருந்தும் பழக்கத்தை விரும்புகின்றனர். தேநீர் அருந்துவதால் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடிகின்றது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15ம் தேதி சர்வதேச…

அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்

இங்கிலாந்தில் பெண் ஒருவர் அறிவுரை கூறியே கோடிக்கணக்கில் சம்பாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரோமா என்ற இளம் பெண்ணே இவ்வாறு சம்பாதிப்பவராவார். இவர் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கு ஆலோசனை மையம் நடத்தியே இந்த…

ஒரே பாரதம், உன்னத பாரதம் கொள்கைக்கு வலுசோ்த்த உச்சநீதிமன்றத் தீா்ப்பு

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பினை உச்சநீதிமன்றம் டிசம்பா் 11 அன்று வழங்கியுள்ளது. இந்த தீா்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும்…

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை இலக்கு வைத்து வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50,000 கோழிக்குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே…

அநுராதபுரத்தில் ஓரினச் சேர்க்கையால் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்

ஓரினச் சேர்க்கையால் அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளர்களின் வீதம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிமல் ஆரியரத்ன இந்த வருடத்தில் 19 எச்.ஐ.வி…

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி கிளிநொச்சியில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேசமயம் பசுமையான…

எண்ணூர் எண்ணெய் கசிவு – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எண்ணெய் கசிவு சென்னை மணலி பகுதியிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், திருவொற்றியூர் நெட்டுக்குப்பம்…

நத்தார் பண்டிகைக்கு அடுத்த நாள் ஏற்படப்போகும் தாழமுக்கம்: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட…

இலங்கையின் தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்ற காற்று சுழற்சி, மேற்கு நோக்கி இலங்கையின் தெற்கு பகுதியினூடாக நகர்ந்து வருவதனால் இன்று (12) முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக மூத்த வானிலை…

நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர்…

காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில் அழைத்து செல்லும் காட்சி சமுக ஊடகங்களில் வெளியாகி பலரது சீற்றத்திற்கும்…

இந்திய விமானப்படை தளத்தில் ரகசிய சுரங்கப்பாதை., பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹிண்டன் விமான தளத்தில் 4 அடி ஆழமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் காஜியாபாத் நகரத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்தின் சுவர்…

13ஆம் திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜே.வி.பி தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

உலக தமிழர் பேரவையை ஈ.பி.டி.பி யினர் வரவேற்கின்றார்களாம்

உலக தமிழர் பேரவையின் வருகை போலி தேசியம் பேசுகின்ற சில குழுக்களுக்கு தடையாக இருக்கலாம். ஆனால் எம்மைப் பொறுத்தவரை புலம்பெயர் அமைப்புகள் யாரும் வரலாம் அவர்களை வரவேற்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர்…

3 மாவட்டங்களுக்கு டெங்கு அபாயம்

கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே தெரிவித்துள்ளார். இதனைத் தவிர புத்தளம், நாத்தாண்டி, குருணாகல், பதுளை மற்றும் ஹாலி-எல ஆகிய சுகாதார வைத்திய…

நாட்டில் அதிகரித்த அரிசி விலை : நுகர்வோர் குற்றச்சாட்டு

இலங்கையில் அரிசி விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையை 30 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இலங்கையின் பிரதான அரிசி நிறுவனம் ஒன்று கிலோ ஒன்றுக்கு 230 ரூபாயாக இருந்த சம்பா அரிசியின்…

இலங்கையில் நிறுவப்படவுள்ள அணு உலைகள்: அணுசக்தி அதிகாரசபை இணக்கம்

ரஷ்யா, சீனா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் அணுசக்தியில் முதலீடு செய்ய முன்வந்ததை அடுத்து, இலங்கை அணுசக்தி அதிகாரசபை அணுசக்தி திட்டத்துக்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…

கனடாவில் பாடசாலை மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

கனடாவில் பாடசாலைகளில் செல்பேசி பயன்பாட்டை மட்டுப்படுத்த அல்லது தடை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ரொறன்ரோ பாடசாலை சபை தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து ரொறன்ரோ பாடசாலை சபை, “கல்வி, சுகாதாரம்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.இணைப்பாளருக்கு எதிராக பெண் உத்தியோகத்தர்…

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள்…

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

குருணாகல், மாவத்தகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் அத்துடன் இந்த சம்பவத்தில்…

உயிரிழந்த 2 வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம்: தந்தையின் நெகிழ்ச்சி செயல்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி, தனது உயிரிழந்த இரண்டு வயது மகளுக்கு கோவில் கட்டி கும்பாஷேகம் நடத்தியுள்ளார். உயிரிழந்த மகள் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள்…

அரசாங்கத்திற்கு எதிராக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள்

அரச சேவை மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்கள் இன்று சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக…

போதைப்பொருளுடன் யாழ்.பல்கலை மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் குறித்த மாணவனை பொலிஸார் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர். கைது…

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து மிரட்டிய கும்பல்

யாழில். ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை ,…

தெனியாய – இரத்தினபுரி பிரதான வீதியில் மண்சரிவு

இரத்தினபுரி - தெனியாய பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா சுகாதார அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகள் , 2040 மற்றும் 50களில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் திறன் கொண்ட நுளம்புகள் இருப்பிடமாக மாறக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரித்தானியாவில் பாதிக்கப்பட்ட முதல்…

பிரஜா உரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பசில் மற்றும் கோட்டாபய:நாமல் ஆதங்கம்

வற் வரி அசாதாரண முறையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நியாயமான முறையில் வரிமுறைமையொன்று காணப்பட வேண்டும். அது பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் காணப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

பெருந்தொகை பண மோசடி வழக்கில் சிக்கிய திலினி பிரியமாலி! நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

வாகனமொன்றை பெற்றுக்கொண்டு பெறுமதியான காசோலைகளை வழங்கி பணம் மோசடி செய்தமைக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திலினி பிரியமாலி விடுவிக்கப்பட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்…

இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய நபர் : இப்படியும் நேர்மையான ஊழியர்கள்

அனுராதபுரத்தில் திருட்டு, குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் காலகட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் கூடிய பையையும்…

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்

ஐந்து பேர் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பெயரிட்டுள்ளார். இதன் தலைவராக முன்னாள் தலைவர் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வீரர்களான தில்ருவான் பெரேரா, தரங்க பரணவிதான, அஜந்த…

எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். உடல்நலக்குறைவு கடந்த 18ஆம் திகதி உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள தனியார்…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்படும் அலைபேசிகள்: அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள…

சட்டவிரோதமான முறையில் பெரும் எண்ணிக்கையிலான அலைபேசிகள் நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் சட்ட ரீதியாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலைபேசி நிறுவனங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குவதாக கூறப்படுகின்றது.…