;
Athirady Tamil News

வரவு செலவு திட்டம் : மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்த மகிந்த!

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவு திட்டம்…

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவியேற்றதிலிருந்து 7.6 பில்லியன் டொலர்கள்…

வாழப் போராடிக்கொண்டிருந்த குழந்தையைக் கைவிட்ட பிரித்தானியா: செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது

ஒரு எட்டு மாதக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அந்தக் குழந்தைக்கு இத்தாலி குடியுரிமை வழங்கியும், பிரித்தானியா அதைக்குறித்தெல்லாம் கவலைப்படாமல், மோசமான முடிவொன்றை எடுத்தது. உயிருக்குப் போராடும் எட்டு மாதக்குழந்தை பிரித்தானியக்…

திருகோணமலையில் காற்றுடன் கூடிய மழை: வீடுகள் பகுதியளவில் சேதம்

திருகோணமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை பெய்த காற்றுடன் கூடிய மழையின் காரணமாக வெருகல் - ஊப்பூரல் கிராமசேவகர்…

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் ஆராய்வு(video)

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையம் தொடர்பில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க ஆராய்ந்துள்ளார். அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ அழைப்பின் பேரில்…

புகைமூட்டமாக மாறிய தலைநகரம் : சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!

சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் நேற்று (நவ.12) தீபாவளி பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிக்க நேரக்…

யாழ். உரும்பிராயில் குழு மோதல் – 3 இளைஞர்கள் காயம்

தீபாவளி தினமான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் உரும்பிராய்…

யாழ்.மாநகர எல்லைக்குள் 4 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்னர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 08 பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் உள்ள வளர்ப்பு நாய்கள் மற்றும்…

நல்லூர் கந்த சஷ்டி விரத பூஜை நேரம்

கந்த சஷ்டி விரதம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும்…

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மருத்துவமனை சேவை நிறுத்தம் – 3 குழந்தைகள் பலி!

இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் காசாவில் மருத்துவமனை சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது…

விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது பாய்ந்த வழக்கு : எந்த ஊரில் எவ்வளவு பேர்?

அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை, நெல்லை…

வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ள பெரும்போக செய்கை கொடுப்பனவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில், முதற்கட்டமாக 5760 பேருக்கு மானிய உரத்திற்கான கொடுப்பனவுகள் அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர்…

வெள்ளத்தில் சிக்கிய லொறியில் திருட்டு! கம்பஹாவில் சம்பவம்

கம்பஹா - ஜாஎல வீதியில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அகரவிட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றில் இருந்து இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியானது பதுளை…

ஈவிரக்கமின்றி தாக்குதல் தொடுக்கும் இஸ்ரேல்: ஸ்தம்பித்துப்போன காசா

காசாவிலுள்ள 35 ற்கும் அதிகமான வைத்தியசாலைகளில் அரைவாசி செயலிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. மோதல்களுக்குள் சிக்கியுள்ள வைத்தியசாலைகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்து பாரிய கரிசனையை வெளியிட்டுள்ளது.…

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 7,833…

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் ஏறத்தாழ 7,833 மில்லியன் ரூபாவாக உள்ளதுடன்,பொதுச் சேவைக்கான செலவீனத்துக்கு 3,861 மில்லியன் ரூபா ஒதுக்கீடாகவுள்ளது. 2024 நிதியாண்டில் இலங்கையில் அல்லது…

யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலய விமானக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 30 வது…

யாழ்ப்பாணம், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் விமானக்குண்டு தாக்குதலின் 30வது நினைவு தினம் இன்றையதினம் காலை நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு திருப்பலியும் அதனைத்தொடர்ந்து நினைவு அஞ்சலி நிகழ்வும் பங்குத்தந்தை அருட்பணி யாவிஸ் அடிகளார்…

அம்பாறை மாவட்ட சதுரங்க போட்டியில் மூன்று வருட ஹெட்ர்டிக் தொடர் சம்பியனாக முபீன் பாத்திமா…

இலங்கை செஸ் சம்மேளன ஏற்பாட்டில் தேசிய யூத் செஸ் சம்பியன்சிப் 2023 அம்பாறை டீ. எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலையில் 2023/11/11,12 (சனி, ஞாயிறு) திகதிகளில் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலய மாணவி முபீன் பாத்திமா சபிலுல் லமாஹ்…

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தீபாவளி தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பேலி - கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து மதகுடன் மோதியதில் குறித்த…

வடமாகாண ஆளுநர் மற்றும் ஜப்பான் தூதுவர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை(10) கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள்…

கணக்கியல் நிகழ்வு

சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் கடந்த, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றது. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன் முகாமைத்துவ…

15 மணிநேரமாக வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை! பட்டாசு சத்தத்தால் பயம்..போராடும்…

தமிழக மாவட்டம் நீலகிரியில் வெடி சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நாயை விரட்டிய சிறுத்தை ஒன்று, தீபாவளி பட்டாசு சத்தத்தினால் பயந்து…

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை!

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்றையதினம் (13-11-2023) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

ஆசிரியையின் பிள்ளைகளை கொலை செய்யப் போவதாக மிரட்டிய கிராம சேவகருக்கு நேர்ந்த கதி!

ஹோமாகம சுவபுதுகம பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் பிள்ளைகளைக் கொலை செய்யப் போவதாக மிரட்டிய கிராம சேவகரை இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம பதில் நீதிவான் பந்து லியனகே உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவத்தில்…

அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம்: தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை

புதிதாக கொண்டுவரப்படவுள்ள கடற்றொழில் சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று திங்கட்கிழமை (13) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கு மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்…!

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அதிபர்…

வரவு செலவுத்திட்ட முன்மொழிவை வாசித்து முடித்தார் அதிபர் ரணில் : ஒத்தி வைக்கப்பட்டது…

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் வரவு - செலவுத் திட்ட முன்மொழிவை வாசித்து…

முகநூலில் முள்ளிவாய்க்கால் தூபி குறித்த பதிவு: யாழ் பேராசிரியர்கள் இருவர் பொலிஸில்…

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி குறித்து முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில்…

காதலியை கொடூரமாக கொன்ற நபருக்கு மன்னிப்பு வழங்கிய புடின்!

காதலியை 111 முறை கத்தியால் குத்தி சித்திரவதை செய்து கொன்ற ரஷ்ய நபருக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் மன்னிப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ரஷ்ய நபர் உக்ரைனில் போரில் ஈடுபட முடிவு செய்ததை அடுத்து, விளாடிமிர் புடின்…

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை இல்லையா? : எம்.பி ஹரீஸ்

மட்டக்களப்பு விகாரதிபதிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சம்பந்தமாக சிவில் மற்றும் இதர தரப்புக்களுடன் கலந்துரையாடும் செயற்பாடுகளுக்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு…

பலாங்கொடை மண்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைக் காணவில்லை !

பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மண்சரிவில் மூன்று வீடுகளுக்கு சேதம்…

வெளிநாடொன்றில் நிர்க்கதியான நிலையில் பெருமளவு இலங்கையர்கள் தவிப்பு

விசாகாலம் நீடிக்கப்படாத நிலையில் 200 ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஜோர்தானில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இலங்கையர்கள் ஜோர்தானின் சஹாப், அல் ஜுமாத் இண்டஸ்ட்ரியல் சிட்டியில் உள்ள அசீல் என்ற தொழிற்சாலையில் பணிபுரிந்து…

வடபகுதியின் வளர்ச்சிக்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் : வடமாகாண ஆளுநரிடம் ஜப்பான்…

"வடபகுதியின் வளர்ச்சிக்குரிய முழு ஒத்துழைப்பையும் ஜப்பான் தொடர்ந்தும் வழங்கும்" என ஜப்பான் தூதுவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இற்கு உறுதி அளித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (10) ஜப்பான் தூதுவர் மற்றும் வடமாகாண ஆளுநர்…

ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட கடன் தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் தொடர்பான வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கடனை விடுவிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரவு செலவுத்…