;
Athirady Tamil News

காதலர்கள் இருவர் படுகொலை : ஐந்து நாட்களுக்குள் நடந்த பயங்கரம்

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ்…

வாகன விபத்துக்களில் ஐவர் பரிதாப மரணம்!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம் மினுவாங்கொடை பிரதான வீதியின் ஆண்டியம்பலம் மத்திய மருந்தகத்துக்கு அருகில்…

ஹிஜாப் அணியாத சிறுமி.. தூக்கி வீசிய காவலர், மாணவி மூளைச்சாவால் மரணம் – அதிர்ச்சி!

சிறுமி ஒருவர் ஹிஜாப் அணியாததால் போலீஸ் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் பகுதியில் உள்ள மெட்ரோவில் அமிர்தா ஜெராவந்த் என்ற 16 வயது சிறுமி சென்றுள்ளார். அவர் அங்கு ஹிஜாப் அணியாமல்…

இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம்.. உரிமையை பறிக்க முடியாது – கல்வி…

மாணவர்கள் இனி நீட் தேர்விற்கு ஹிஜாப் அணிந்து செல்லலாம் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஹிஜாப் கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர்…

சுவிஸ் இளம்பெண்ணை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொன்ற நபர்: மொபைலில் உள்ள புகைப்படங்களால்…

சுவிஸ் நாட்டு இளம்பெண் ஒருவரை இந்தியாவுக்கு வரவழைத்துக் கொலை செய்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பெணக்ளைக் கடத்தும் கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையவராக இருப்பார் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சடலமாகக்…

மகள்களை விற்க வரும் தந்தைகள் – சந்தையில் ஏலம் கேட்கும் ஆண்கள்!

மணமகள் சந்தை என்ற விசித்திர முறையை நாடு ஒன்று பின்பற்றி வருகிறது. மணமகள் சந்தை பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற முறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை ஜிப்சி மணப்பெண் சந்தை என அழைக்கின்றனர். இந்த சந்தையில் மக்கள் அலைந்து…

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக சிறிய வகை நுளம்பு இனம்

கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் Uranotaenia Trilineata எனப்படும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நுளம்பினமானது இலங்கையில்…

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்: விலையில் திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை (gold price) ஏற்றத்துடன் பதிவாகி வருகின்ற நிலையில் தற்போது திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி நிலை நிலவுகிறது. இதன்படி, இலங்கையில் இன்று ஒரு அவுன்ஸ்…

தாழ்நிலப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதனை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நீர்ப்பாசன திணைக்களம் பொறியியலாளர்…

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்னொரு இந்தியர்… சுந்தர் பிச்சையை விடவும்…

கூகுள் கிளவுட் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான தாமஸ் குரியன் என்பவரே உலகின் இரண்டாவது பணக்கார இந்திய மேலாளர் என கூறப்படுகிறது. தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த Thomas Kurian தமது…

தென்னிலங்கையில் திருமணம் ஒன்றால் ஏற்பட்ட விபரீதம்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

காலியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, கொஸ்கொட சுஜீ தரப்பினால் முன்னைய…

பிரான்ஸ் இற்கு சட்டவிரோதமாக சென்ற யாழ் நபர்; இடைநடுவில் நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச்…

ஹமாஸ் அமைப்பின் முக்கிய புள்ளி கொல்லப்பட்டார்!

காசாவில் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இஸ்ரேலிய விமானம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் பீரங்கி படை துணைத் தலைவரான முஹம்மது கதாமாஷை கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) கூறியுள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மத்திய…

பொது சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!

பொது சுகாதார அமைப்பு பொதுமக்களிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பரவும் நோய்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கண் நோய்கள்,…

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான தீர்வுகள் அவசியம்!

நாடு வங்குரோத்து நிலையில் உள்ள போது ஆக்கப்பூர்வமான மற்றும் புதிய தீர்வுகள் மூலம் ஒரு வெளிச்சக் கோட்டை உருவாக்க முடியும். நாடு வீழ்ச்சியடந்துள்ள போதும் அதிலிருந்து சரியாக மீள எழு வேண்டும். இதன் மூலம் புதிய பார்வையில் தேசத்தை கட்டியெழுப்ப…

நடிகை கவுதமி பாஜகவில் இருந்து விலகிய அடுத்த நிமிடமே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

நடிகை கவுதமியின் புகாரின் பேரில் பாஜக பிரமுகர் அழகப்பன் உட்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை கவுதமி நடிகை கவுதமி இன்று காலை பாஜகவில் இருந்து விலகுவதாக ஒரு கடிதத்தை…

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறை அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்ப வன்முறைகள் பதிவாகி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட சிறுவர் பாதுகாப்பு குழு கூட்டம் ஒன்றிலே இந்த விடயம்…

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள், தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக…

களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

நெல் களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் காணாமல் போயுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள்ளக ஊழியர்கள் குழுவொன்று அமைச்சரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இது தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த…

ரணில் விக்ரமசிங்க செய்தது தவறு : சிறிலங்கா பொதுஜன பெரமுன பகிரங்க குற்றச்சாட்டு

சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானம் தவறானதென சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக சிறிலங்கா சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹேலிய ரம்புக்வெல்ல மாற்றப்பட்டமை…

உக்ரைனியர்களை கதிகலங்க வைத்த ரஷ்யா! அறுவர் பலி : 16 பேர் காயம்

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள தபால் விநியோக மையத்தின் மீது நேற்று(22) ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர். கார்கிவ் பிராந்தியஆளுநர் ஓலே சினிஹுபோவ் இந்தத் தாக்குதல் தொடர்பில்…

பெண் மருத்துவரிடம் அத்துமீறல்.. சிறுமியை கூட விடல, சீரழித்த சீனியர் டாக்டர் –…

ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு உறைவிட மருத்துவராக…

திருகோணமலையில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் இன்றையதினம் (23.10.2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈச்சிலம்பற்று - முத்துச்சேனை…

கடுவெல பிரேடி குழுவினர் கைது!

வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களைத் திருடிய கடுவெல பிரேடி என்ற பெயர் சூட்டப்பட்ட நபர் உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுடன் உடஹமுல்லை பிரதேசத்தில் வைத்து மிரிஹானை தலைமையக பொலிஸாரால் அவர்கள் கைது…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் எப்போது?

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…

மட்டக்களப்பு வாவியின் அவல நிலை!

கிழக்கின் அழகு மிக்க வாவியானது இன்று அசிங்கப்பட்ட நிலையில் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியில் பலவிதமான கழிவுகளையும் கொண்டு போடுவதனால் வாவி மாசடைந்த நிலையில்…

யாழில் மீண்டும் இடைநிறுத்தப்பட்ட குமுதினி படகு சேவை

யாழ்.நெடுந்தீவு குறிகாட்டுவானுக்கான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குமுதினி படகு சுமார் ஒரு கோடியே 63 இலட்சம் ரூபாய் செலவில் திருத்தியமைக்கப்பட்ட போதும் மீளவும் பழுதடைந்த நிலையில் மாவிலித்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முடிவு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தனியான அதிகார சபையொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது…

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிரடி நடவடிகையால் ஆடிப்போன மூவர்!

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக குறித்த மூவரின் கட்சியின் உறுப்புரிமையை…

பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு செய்கிறது: ஹர்ஷன ராஜகருணா கேள்வி

மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வியெழுப்பியுள்ளார். இன்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து…

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குமாறு இ.தொ.கா வலியுறுத்தல்

தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தீபாவளி கொடுப்பனவுகள் குறித்து கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நாட்டில்…

சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் வெடித்த பாய்லர்: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை…

விமானத்திலேயே உயிரிழந்த இலங்கை பெண்

கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி சேவையை முடித்து விட்டு இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணொருவர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு கொடுப்பனவு!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபா வெகுமதியாக வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. 5,000 ரூபா வெகுமதி இந்த…