;
Athirady Tamil News
Monthly Archives

February 2024

வைத்தியரை பதவி நீக்கும் வரை போராட்டம் தொடரும்; கொழும்பில் அதிரடி காட்டும் ஊழியர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில்…

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

நாடளாவிய ரீதயில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு…

காசா எல்லை சுவர்களை உயர்த்தும் எகிப்து: வெளியானது புகைப்படங்கள்

ராபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தவுள்ள நிலையில் எகிப்து நாடு, காசாவின் எல்லையையொட்டிய தனது பிராந்திய பகுதிகளில் சுவர் எழுப்பி வருகிறதாக தெரியவந்துள்ளது. அதன்படி, எல்லை பகுதியையொட்டிய நிலத்தை உயர்த்தும் பணிகளிலும்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள்…

யாழில் இரும்பு பெட்டியால் பரபரப்பு..!!!

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது. ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த…

மன்னார் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , கழுத்து நெரித்து கொலை

மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று இடம்பெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை…

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை ஆராதனை நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த இசை ஆராதனை நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, துணைத்தூதுவர் ராகேஷ்…

கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள் மீட்பு

நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இதன்போது சூர்தீன்…

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸாருக்கு விசேட உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ்…

இஸ்ரேல் முற்றுகை: ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நோயாளிகள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள தெற்கு காஸாவின் முக்கிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள கான் யூனிஸ் நகரில் தொடா்…

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் – சென்னையில் கொடூரம்!

2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். குப்பைத் தொட்டியில் குழந்தை சென்னை பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு அருகிலுள்ள குப்பை கொட்டும்…

இலங்கை நடாத்தும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல…

கடலில் மாயமான மாணவர்கள்! ஒருவரின் உடல் மீட்பு

அம்பாறை மாவட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரத்தில் இழுத்து செல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் உடல் ஒழுவில் பகுதியில் கரையொதுகியுள்ளது. இதனடிப்படையில், சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலமே இன்று(17) காலை கரையொதுங்கியுள்ளது.…

இலங்கையில் காணி விலைகள் வீழ்ச்சியடையும் : பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டு

இலங்கையில் அடுத்த சில மாதங்களில் காணி விலைகள் வேகமாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதேவேளை குறித்த காலப்பகுதியில் நாட்டின் காணி சந்தைக்கு அதிக அளவில் காணிகள் கிடைக்கவுள்ளமையினால் இவ்வாறு வீழ்ச்சி ஏற்படவுள்ளதாக…

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா காலமாகியுள்ளார். அவர் தனது 83ஆவது வயதில் காலமானதாக தெரியவருகிறது. 1941 ஜனவரி 29 ஆம் திகதி பிறந்த காமினி ஜயவிக்ரம பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர். நலம் விசாரிக்க…

யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் ஜீவன்

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட…

ரஷிய முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் மரணம்

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்த அலெக்ஸி நவால்னி (47) சிறையில் வெள்ளிக்கிழமை மரணமடைந்தாா். கருத்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து சிறையில்…

யாழ். இணுவில் ரயில் கடவை : அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் நிரந்தர ரயில் கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும்வரை அங்கு ஏற்படும் அனர்த்தங்களை கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்காலிக தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளார். அண்மையில் இணுவில் பகுதியில் ரயிலுடன் வான்…

அரச வைத்தியசாலைகளில் தாமதமாகும் சத்திர சிகிச்சைகள்: வெளியான காரணம்

விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக அரச வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் தாமதமடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வைத்தியசாலைகளில் மூன்று விசேட வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், சில வைத்தியசாலைகளில் ஒருவர் மாத்திரமே…

இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான 700 பேருந்துகளை ஏலமிட தீர்மானம்

இவ்வருடம் சேவையில் இருந்து நீக்கப்பட்ட எழுநூறு பேருந்துகளை ஏலம் விடுவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் பல வருடங்களாக சேவையில்லாமலிருந்ததாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ்…

குடும்ப தகராறில் மனைவியின் கால்களை வெட்டியெடுத்த இளம் கணவன்

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக நேற்று மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றத்தைச்…

வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாரியபொல, களுகமுவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வானில் பயணித்த 4 மாத குழந்தை உட்பட 15 பேர் காயமடைந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொலவில் இருந்து களுகமுவ நோக்கி நேற்று மாலை பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி…

என்ன செய்யப்போகிறது நா.த.க..? கை நழுவிய சின்னம்..? இருக்கும் ஒரே வாய்ப்பு..!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உச்சநீதிமன்றம் சென்றாவது தங்களது சின்னத்தை பெறுவோம் என நாம் தமிழர் உறுதிபட தெரிவித்து வருகின்றனர். கரும்பு - விவசாயி சின்னம் தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தேர்தல் களத்தில் போட்டியிட்டு வரும் நாம்…

குடியுரிமை தொடர்பில் ரஞ்சன் வெளியிட்டுள்ள தகவல்

தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது…

நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு: 200 மில்லியன் நட்டஈடு கோரும் குடும்பஸ்தினர்

கடந்த சில நாட்களுக்கு நாரம்மல பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த தச்சுப்பணியாளரின், மனைவி, நட்டஈடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து…

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகளை கடத்தவிருந்த நபர் கைது

இராமேஸ்வரம் ஆற்றங்கரை கடற்கரை அருகே அம்மன் கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள தோப்பில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்பிலான 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மெரைன் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன்,…

மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு - தன்னாமுனை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் ஒருவர் உயரிழந்துள்ளார். குறித்த விபத்தானது, நேற்று(16) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு - தன்னாமுனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றுமே இவ்வாறு…

பேரக்குழந்தைகள் இல்லாத நகரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

அவுஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி "பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக" மாறிவிடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. சிட்னியில் இருந்து அதிகளவானோர் வெளியேறுவதும் வெளிநாடுகளுக்கு குடியெர்வதும் இதற்கு காரணமென…

குடும்ப விசிட் விசா : குவைத்தின் புதிய அறிவிப்பு!

குவைத் நாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களை, குடும்ப விசாவில் அழைத்து வர விரும்பினால் இரண்டு விமான நிறுவனங்களில் மட்டுமே பயணிக்க வேண்டும் என அந்த நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. வளைகுடா நாடுகளில் தங்கி பணிபுரியும் பலர் தங்கள்…

இந்திய மாணவர்களை இழக்கும் பிரித்தானியா: சுனக்கின் திட்டத்தின் எதிரொலி

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா மற்றும் இந்தியாவுக்கான உறவில் விரிசல் கண்டதை அடுத்து, இந்திய மாணவர்கள் பெருமளவில் கனேடிய பல்கலைக்கழகங்களை…

பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகவேண்டும்: விரும்பம் தெரிவிக்கும் ரஷ்யா

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை…

”எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே” றிஷாட் பதியுதீன்!

தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்பது கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றையதினம்(16) முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றதன் பின்னர்…

அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு

புது தில்லி: தில்லியின் அலிபூர் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், அதன் உரிமையாளர் மீது தில்லி போலீசார் குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தில்லியின் அலிபூா்…

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலைய பகுதியில் யானைகள் சஞ்சாரம்(video)

அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் சில அருகில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களுக்கும் சேதங்களை விளைவிப்பதனால் மக்கள்…