;
Athirady Tamil News
Yearly Archives

2024

இரு அரச நிறுவனங்களை ஒன்றிணைந்த நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை வானொலி கூட்டுத்தாபனம் என்பன ஒன்றிணைந்த அரச நிறுவனமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொது நிறுவனங்கள் மறுசீரமைப்புக் குழு வழங்கிய அறிவுறுத்தலின்…

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ்…

அரச குடும்பத்திற்கு திரும்ப ஆசைப்படும் இளவரசர் ஹரி: அரண்மனை வட்டாரத்தில் கசிந்த தகவல்

அரச குடும்பத்திற்கு மீண்டும் திரும்பி, பணிகளை முன்னெடுக்கவும், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு உதவவும் இளவரசர் ஹரி ஆசைப்படுவதாக அரணமனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மனம் திறந்த இளவரசர் ஹரி மன்னர் சார்லஸ் மற்றும் அவரை…

பிரான்ஸ் விசா : வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரான்ஸ்க்கான விசா தொடர்பில் அந்த நாட்டு அரசாங்கம் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையிலேயே, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.…

ஆண்டு பிறந்து ஒன்றரை மாதத்தில் நிறைவேறிய பாபா வங்காவின் சில்லிட வைக்கும் இரண்டு கணிப்புகள்

2024ல் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என்றும் புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளது நிறைவேறி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் தடுப்பூசி கண்பார்வை…

உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை: முன்னேரும் ரஷ்ய படைகள்

உக்ரைனுக்கு ரஷ்ய படையினர் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்போது, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அவ்டியீவ்கா நகரம்(Avdiivka City), ரஷ்ய படைகளால் கைப்பற்றப்படலாம் என்று…

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க தயாராகும் இலங்கை அரசாங்கம்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை என்று ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம்…

இலங்கையில் செயற்கைகோளால் கண்டறியப்பட்ட எண்ணெய்கசிவு ; கசிவை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு 15…

செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு 15 மில்லியன் பணத்தை இலங்கை அபராதமாக விதித்துள்ளது. இதன் வாயிலாக இலங்கையில் முதன்முறையாக செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் எண்ணெய் கசிவு ஏற்படுவது…

தில்லி நேரு விளையாட்டு அரங்கம் அருகே தற்காலிக பந்தல் சரிந்து 8 பேர் காயம்

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள அமைக்கப்படிருந்த தற்காலிக பந்தல் ஒன்று சனிக்கிழமை சரிந்து விழுந்தது. இதில், 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

கிழக்கு மாகாண சபை முன்னாள் தவிசாளரின் காரில் மோதுண்டு ஒருவர் பலி

தம்புள்ளை – பல் வெஹர பிரதேசத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி பயணித்த காரில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (17.02.2024) இடம்பெற்றுள்ளது. மாத்தளை - நாவுல பகுதியை சேர்ந்த 39…

பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல்! அம்பலமாகும் சந்திரிக்காவின் சதித்திட்டம்

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார அதிபர் முறையை நீக்குவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த நடவடிக்கையின் பின்னணியில் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக குற்றம்…

அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் : புடினின் கோரிக்கை!

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென அந்த நாட்டு அதிபர் விளாடிமீர் புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன்-ரஷ்ய…

வீதியில் உலரவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை உணவாக உட்கொள்ளும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் எச்சரிக்கை…

நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபை வழங்கியுள்ள அறிவுறுத்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63%ஆக அதிகரிக்க முடியும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல்…

மரக்கறி விலைகளில் ஏற்பட்ட மாற்றம்!

கொழும்பு - பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய விலைகள் அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய்,…

உடலில் பல நோய்களை கட்டுக்குள் வைத்திருக்கும் கஜி நேமு எலுமிச்சை?தெரிஞ்சுக்கோங்க

எலுமிச்சை பழம் என்பது பொதுவாக எல்லா இடத்திலும் கிடைக்கும் ஒரு பழமாகும். இந்த வகையில் அசாம் மாநிலத்தில் விளையும் ஒரு வகையான எலுமிச்சை கஜி நேமு எனும் பழமாகும். இது சிட்ரஸ் லெமன் என அழைக்கப்படுகிறது. இந்த பழம் மற்ற எலுமிச்சை பழங்களை விட…

எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு புடினே பொறுப்பு: ஜோ பைடன்

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு அந்நாட்டு அதிபர் புடின் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ரஷ்ய அதிபர் புடினையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக…

கேஜரிவால் மார்ச் 16-ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை நோட்டீஸ் அனுப்பியும் கேஜரிவால் ஆஜராகவில்லை. இதனிடையே, கேஜரிவால் ஆஜராக தில்லி நீதிமன்றத்தில்…

ஈமக்கிரியை கழிவுகளால் அபாய நிலையை அடையும் யாழ்ப்பாண கீரிமலை

யாழ்ப்பாணம் கீரிமலை புனித தீர்த்த கரையோரத்தில் ஈமக் கிரியைக் கழிவுகள் பாரியளவில் கொட்டிக்கிடப்பதனால் அக் கடற்கரைப்பகுதி மிக மோசமாக அசுத்தமடைந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை…

குறைந்த வருமானம் பெறுவோரிற்கு முக்கிய தகவல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன வெளியிட்டுள்ளார். கட்டாய முறைமை ஒரே நபர்…

போதைப்பொருள் உட்கொண்ட தரம் 5 மாணவர்கள்: வெளியான காரணம்

தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் குருநாகல் - மதுராகொட பிரதேச ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்…

வைத்தியரை பதவி நீக்கும் வரை போராட்டம் தொடரும்; கொழும்பில் அதிரடி காட்டும் ஊழியர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லனவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் வரையில் தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில்…

யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்ட வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவு

நாடளாவிய ரீதயில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் கைப்பற்றப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு…

காசா எல்லை சுவர்களை உயர்த்தும் எகிப்து: வெளியானது புகைப்படங்கள்

ராபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தவுள்ள நிலையில் எகிப்து நாடு, காசாவின் எல்லையையொட்டிய தனது பிராந்திய பகுதிகளில் சுவர் எழுப்பி வருகிறதாக தெரியவந்துள்ளது. அதன்படி, எல்லை பகுதியையொட்டிய நிலத்தை உயர்த்தும் பணிகளிலும்…

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!

தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு முற்றிலும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள்…

யாழில் இரும்பு பெட்டியால் பரபரப்பு..!!!

யாழ்ப்பாண நகர்பகுதியில் இன்று(17) காலை இரும்பு பெட்டியொன்று அனாதரவாக காணப்பட்டதால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற அச்சம் காணப்பட்டு பரபரப்பான சூழல் உருவானது. ஆஸ்பத்திரி வீதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகிலேயே குறித்த…

மன்னார் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு , கழுத்து நெரித்து கொலை

மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று இடம்பெற்ற சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை…

சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை ஆராதனை நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று இடம்பெற்றது. இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த இசை ஆராதனை நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, துணைத்தூதுவர் ராகேஷ்…

கடலில் மூழ்கிய மாளிகைக்காடு, சாய்ந்தமருது மாணவர்களின் சடலங்கள் மீட்பு

நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இதன்போது சூர்தீன்…

யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது குறித்து பொலிஸாருக்கு விசேட உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ்…

இஸ்ரேல் முற்றுகை: ஆக்ஸிஜன் இல்லாமல் 5 நோயாளிகள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ள தெற்கு காஸாவின் முக்கிய மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: இஸ்ரேல் படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ள கான் யூனிஸ் நகரில் தொடா்…

பச்சிளம் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற நபர்கள் – சென்னையில் கொடூரம்!

2 நாட்களாக குப்பைத் தொட்டியில் கிடந்த பிறந்து சில நாட்களேயான குழந்தையை பெண் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார். குப்பைத் தொட்டியில் குழந்தை சென்னை பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதிக்கு அருகிலுள்ள குப்பை கொட்டும்…

இலங்கை நடாத்தும் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் 37ஆவது ஆசிய மற்றும் பசுபிக் வலய மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதுடன் குறித்த மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல…

கடலில் மாயமான மாணவர்கள்! ஒருவரின் உடல் மீட்பு

அம்பாறை மாவட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரத்தில் இழுத்து செல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் உடல் ஒழுவில் பகுதியில் கரையொதுகியுள்ளது. இதனடிப்படையில், சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலமே இன்று(17) காலை கரையொதுங்கியுள்ளது.…