;
Athirady Tamil News

புளொட் அமைப்பின் தோழர் சங்கிலி அவர்களின் நினைவு நாளில், உதவி வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

புளொட் அமைப்பின் தோழர் சங்கிலி அவர்களின் நினைவு நாளில், உதவி வழங்கல்.. (வீடியோ படங்கள்)

புளொட் அமைப்பின் வீரமிகு தளபதி தோழர் சங்கிலி அவர்களின் நினைவு நாளில் கிளச்சர் வழங்கி வைக்கப்பட்டது.
###################################

புளொட் அமைப்பின் வீரமிகு தளபதிகளில் ஒருவரும், புளொட் செயலதிபர் தோழர் உமா மகேஸ்வரனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்து புளொட் அமைப்பின் சார்பில் பல களமுனைகளை சந்தித்து சாதித்தவரும், சகோதர படுகொலையால் பலியெடுக்கப்பட்டவருமான “சங்கிலியன்” என புளொட் தோழர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோழர் கந்தசாமி கதிர்காமராஜா அவர்களின் 32 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மரக்காரம்பளயில் வசிக்கும் ஒரு குழந்தையின் தந்தைக்கு கிளச்சர் உதவி வழங்கி வைக்கப்பட்டது..

வவுனியா அன்பக சிறுவர் அபிவிருத்தி இல்லத்தில் வளர்ந்து, பின்னர் குடும்ப பந்தத்தில் இணைந்து, தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையான நிலையில், தற்போதைய கொரோனா தொற்று நோய் காரணமாக தொழில் வாய்ப்பிழந்த நிலையில் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை தவறுதலாக நிலத்தில் விழுந்ததால் இரு கால்களும் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வாழ்ந்து வரும் நிலையில், பல சத்திர சிகிச்சை செய்யப்பட்டு தற்சமயம் கிளச்சர் துணையுடன் எழுந்து நடக்க வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ள போதும்..

கிளச்சர் வாங்குவதற்கு பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” உதவியை நாடிவந்த வேளை உடனடியாக புளொட் தளபதி தோழர் சங்கிலி அவர்களின் 32 வது நினைவு நாளில் புளொட் தோழர்கள், ஆதரவாளர்கள் சார்பில் சுவிஸ் நாட்டில் சொலோத்தூண் பகுதியில் வதியும் புளொட் அமைப்பின் உறுப்பினர் தோழர் லெனின் எனும் செல்வபாலன் அவர்களின் நிதிப் பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக மேற்படி உதவி வழங்கப்பட்டது.

உதவியை பெற்றுக் கொண்டவுடன் எழுந்து நடந்து தனது பழைய வாழ்வை வாழ்வதற்கு முயற்சி செய்ய ஆரம்பித்ததை உடனடியாக கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது. இந்த குடும்பஸ்தரின் எதிர்கால வாழ்வுக்கு உதவிய சுவிஸ் சொலத்தூணில் வசிக்கும் புளொட் சுவிஸ் கிளைத் தோழர் லெனின் என அழைக்கப்படும் திரு செல்வபாலன் அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

20.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.