;
Athirady Tamil News

புங்குடுதீவு சுலோ அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

0

புங்குடுதீவு சிலோ அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்)

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்தவரும், யாழில் வசிப்பவருமான “சுலோ” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களின் அறுபைத்தந்தாவது பிறந்த தினம் இன்று பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்கள் சேனாதிராஜா தெய்வநாயகி தம்பதிகளின் புதல்விகளில் ஒருவரும், தர்மர் என அன்புடன் அழைக்கப்படும் அமரர் தனபாலன் அவர்களின் துணைவியாரும், வாகினி, திலீபன் ஆகியோரின் அன்புத் தாயாருமான புங்குடுதீவில் வசிக்கும் “சுலோ” என அன்புடன் அழைக்கப்படும், திருமதி.தனபாலன் சுலோசனாம்பிகை அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரது பிள்ளைகள் வாகினி, திலீபன் ஆகியோரினால் வழங்கப்பட்ட நிதியில் இன்றையதினம் மாணவ மாணவிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொள்ள அக்கிராமத்தில் வாழும் தேவையுடைய மக்களுக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் வவுனியா கிராமமான எல்லப்பர்மருதங்குளம் கிராமத்தில் வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் சுமார் பத்து குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டது மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்* வேண்டுகோளுக்கு இணங்க சமூக செயற்பாட்டாளரான திருமதி பிரியங்கா அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார். இந்நிகழ்வில், எல்லப்பர்மருதங்குளம் RDS. தலைவர் திரு. குணசிங்கம். குமார், ஆனந்தபுரம் சமுர்த்தி தலைவி திருமதி. கனகவேல். சத்தியா, எல்லப்பர்மருதங்குளம் சமூக செயற்பாட்டாளர் திரு. பரமசிவன். சங்கர்நாத் ஆகியோர் விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய நாளில் புங்குடுதீவில் தனது அறுபத்தைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தேக ஆரோக்கியத்துடன் நோய்நொடியின்றி சந்தோசமாக பல்லாண்டு காலம் வாழ்க வாழகவென தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தும் அதேவேளை, அவரது பிறந்த நாளை முன்னிட்டு தாயக உறவுகளின் தேவையுடையோருக்கு பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைத்தமைக்காகவும், இவற்றுக்கான நிதி பங்களிப்பை வழங்கிய அவரது பிள்ளைகள், ஆகியோருக்கும் மதிப்புமிகு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
10.06.2023

புங்குடுதீவு சிலோ அவர்களின் அறுபத்தைந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு, உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.