;
Athirady Tamil News

1983 ஜூலை கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவு – இலண்டன் மாநகரில் தமிழ் இளையோர்களால் நினைவேந்தல்.

0

1983 ஜூலை கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவு – இலண்டன் மாநகரில் தமிழ் இளையோர்களால் நினைவேந்தல்.

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாததும் அரச பயங்கரவாதத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றதுமான 1983 ஜூலைக்கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அஞ்சலி நிகழ்ச்சியும் புலம்பெயர் தமிழ் மக்களாலும், தமிழ் இளையோர்களாலும் இலண்டன் மாநகரில் இடம்பெற்றது.

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோர் அமைப்பும் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நேற்று 23.07.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்றது.

“தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் 41 ஆண்டுகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் இலங்கை அரசினைக்கண்டிக்கும் முகமான ஆர்ப்பாட்டப்பேரணியும், பல தசாப்தங்களாகத்தொடரும் தமிழின அழிப்பு தொடர்பான ஆவண நிழற்பட காட்சிப்படுத்தலும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பாரிய அளவிலான தமிழ் இளையோர்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு இலங்கை அரசினை கண்டிக்கும் கோசங்களை எழுப்பியதுடன், இலங்கை அரசினை தண்டிக்குமாறும் பிரித்தானியாவின் புதிய அரசு மற்றும் உலகநாடுகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.