;
Athirady Tamil News

தமிழீழ இராணுவத்தின் தலைவர் பனாகொடை மகேஸ்வரனின் வித்துடல் அக்கினியுடன் சங்கமம்.. (படங்கள் இணைப்பு)

0

தமிழீழ இராணுவத்தின் தலைவர் பனாகொடை மகேஸ்வரனின் வித்துடல் அக்கினியுடன் சங்கமம்.. (படங்கள் இணைப்பு)

ஈழவிடுதலை இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் [ TEA ] தலைவர் பனாகொடை மகேஸ்வரன் இன்று மதியம் 11 மணியளவில் அக்னி தேவனுடன் சங்கமித்தார்.

அவரின் நல்லூர் இல்லத்தில் காலையில் 8 மணியளவில் தொடங்கி நடைபெற்ற இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும் தோழர்களின் அஞ்சலி உரையோடும் சகோதரியின் நன்றி நவிலலோடும் அவரது இறுதியாத்திரை ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் செம்மணியில் அமைந்த இந்து மயானத்தில் தீரமிக்க போராளியும், சாதனைகளின் நாயகனுமான புங்குடுதீவு மண்ணின் மைந்தரான தோழர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் [ தம்பா என்கிற பனாகொடை மகேஸ்வரன்] அவர்களின் பூதவுடல் அவரது இளைய சகோதரனால் அக்னி தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஈழவிடுதலைக்காய் தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்ததோடு, தன் அதிகமான வாழ்க்கைக் காலத்தை பல்வேறு கொடுஞ்சிறைகளில் கழித்த ஒரு வீரமைந்தன் பனாகொடை மகேஸ்வரன்.

எது எவ்வாறாயினும் ஈழவிடுதலை வரலாறானது உமது உழைப்பினையும் தியாகத்தினையும் கௌரவத்தோடு சுமந்தபடி நகரும் என்பதே சத்தியம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.