;
Athirady Tamil News

இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

0

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளில் இலண்டனில் தமிழ் இளையோர்கள் ஆர்ப்பாட்டம் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளான நேற்று 30.08.2024 ஸ்ரீலங்காவில் அரச படைகளாலும், அரச படைகளுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களாலும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்த்தேசிய உறவுகளை நினைவேந்தியும் ஸ்ரீலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி வேண்டியும் நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் இலண்டன் திராஃபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டமும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மனு அளிக்கும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய தொகுதி எம்.பிக்களின் அழைப்பில் இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் இலண்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் மற்றும் குறிப்பாக தமிழ் யுவதிகளும் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கினர். இவ்வேளையில் இதே நாளில் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆர்ப்பாட்டங்களில் அரச பொலிஸ், அதிரடிப்படை, இராணுவத்தினர் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்து கோஷங்கள் எழுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.