;
Athirady Tamil News

புளொட் தலைவரின் தந்தையார் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி (படங்கள், வீடியோ)

0

புளொட் தலைவரின் தந்தையார் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி (படங்கள், வீடியோ)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் (02) அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள அவரது நினைவுத் தூபியில் இன்று காலை 7மணியளவில் வலிதெற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் அன்னதானம் றிச்சாட் தவப்பிரகாசம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியற்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரையாற்றினார்.

குறித்த நினைவஞ்சலியில், வி.தர்மலிங்கம் அவர்களின் மகனும் புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை
முன்னாள் விவசாய அமைச்சரம், புளொட் அமைப்பின் நிதி பொறுப்பாளருமான க.சிவநேசன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரம், புளொட் அமைப்பின் யாழ் மாவட்டப் பொறுப்பாளருமான பா.கஜதீபன், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஸ்வநாதர் தர்மலிங்கம் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதுடன் இதேநாளிலேயே கோப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.ஆலாலசுந்தரமும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் நேற்று நிறைவேற்றிய தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் நினைவேந்தலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், சுகவீனம் காரணமாக நேற்றைய இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்தை ஒற்றுமையாக இணைந்து நடைமுறைப்படுத்துவோம் என்றார்.

புளொட் தலைவரின் தந்தையார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 39ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் அனுஷ்டிக்கப்பு. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.