;
Athirady Tamil News

பால்நிலை சமத்துவ கற்கைநெறிக்கான முன்மொழிவு கையளிப்பு!!

0

பால்நிலை சமத்துவம் பேணும் கற்கை நெறியினை பாடத்திட்டத்தினுள் உள்வாங்குவது தொடர்பான முன்மொழிவொன்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியினரால் இன்றையதினம் (06.11.2021) பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

முன்பள்ளியிலிருந்தே பாடத்திடத்தின் மூலம் பால்நிலை சமத்துவத்தினை கற்பிக்கப்படுவதற்கான கருப்பொருளிலமைந்த இம்முன்மொழிவினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணி செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி

You might also like

Leave A Reply

Your email address will not be published.