;
Athirady Tamil News

லொறி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி!!

0

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் பண்டாரவத்த பகுதியில் நேற்று (5) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை கோனாகொல்ல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற நேற்று (5) சிலாபம் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த லொறியொன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் நின்ற மா மரமொன்றில் மோதியுள்ளது.

இதன்போது குறித்த லொறியில் பயணம் செய்த குறித்த இளைஞர் காயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்களால் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.