;
Athirady Tamil News

’தட்டுபாட்டுகளுக்குக் கொரோனா காரணமில்லை’!!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துபொருள்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு கொரோனா வைரஸ் காரணமில்லை என தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கொரோனா வைரஸின் ஆரம்பக் காலத்தில் அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்துகொண்டது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (08) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டால் மருந்துபொருள்களுக்கு பாரிய தட்டுப்பாடு எற்பட்டுள்ளது. மருந்துபொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி இல்லை என்பதே இதற்குக் காரணம். மருந்து தட்டுப்பாடுக்கு கொரோனா காரணமில்லை எனவும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தக் காலப் பகுதியில் அரசாங்கம் முட்டாள்தனமாக நடந்துகொண்டது. மூடநம்பிக்கைகளின் பின்னால் சென்றது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.