;
Athirady Tamil News

1 வயது ஆண் குழந்தை உட்பட யாழ் போதனாவில் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா!!

0

யாழ். போதனா வைத்தியசாலையில் 1 வயதும் 8மாதமுமான ஆண் குழந்தையுடன் 24 பேர் உட்பட வடக்கில் மேலும் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று (08) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில்,
யாழ். போதனா வைத்தியசாலையில் – 24 பேர் (ஒரு வயது ஆண் குழந்தைகள் உட்பட)
பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 05 பேரும் (16 வயது பெண்,50 வயது ஆண் உட்பட )
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் – ஒருவர் (66 வயது முதியவர்)
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும் (53 வயது பெண் )
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் – 02 பேர் (26 மற்றும் 39 வயது பெண்கள் )
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் – ஒருவர் (32 வயது ஆண் )
இரணைமடு விமான படைவீரர்கள் 03 பேர் என இவ்வாறு 37 தொற்றாளர்கள் அடையாளம் காண்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.