;
Athirady Tamil News

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி!!

0

புத்தளம் – பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று (8) இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரால் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கட்டுத்துவக்கு தவறுதலாக வெடித்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.