;
Athirady Tamil News

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா!!

0

நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 115,867 தோட்டத் ​தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இவ்வாறு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மா நிவாரண விலையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.