;
Athirady Tamil News

மிரிஹான போராட்டம்: பாதுகாப்பு சபை கூடவில்லை !!

0

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்புச் சபை கூட்டத்தை கூட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன,

ஊடகச் செய்திகளுக்கு மாறாக, அத்தகைய சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாதுகாப்புச் செயலாளர், விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு, அங்கீகாரமற்ற நபர்களுடன் அவ்வாறான சந்திப்பு எதுவும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அனைத்து தேசிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் முடிவெடுக்கும் ஜனாதிபதியின் முக்கிய அங்கம் என்பதால், ஜனாதிபதி செயலகத்தால் இந்த சந்திப்பு நடத்தப்படுகிறது என்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அங்கீகரிக்கப்படாத நபர்கள் எவரும் பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை அல்லது அனுமதிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இருந்தால், அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டு, பாதுகாப்பு சபை நிகழ்ச்சி நிரலுக்கு முன்னதாக அந்த விவகாரம் கையாளப்படும் என்று குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு விடயங்களில் இவ்வாறான தவறான தகவல்களை நம்புவதைத் தவிர்க்குமாறு ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் அமைச்சு அறிவுறுத்துகிறது என்றார்.

நாட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மேற்பார்வையிட பாதுகாப்பு அமைச்சு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான புதுப்பிப்புகளை தொடர்ந்து வெளியிடும் என மேலும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.