நீர்கொழும்பில் பதற்றம்: வீடுகள் மீது தாக்குதல் !! (வீடியோ)

பெரியமுல்ல மற்றும் கட்டுவாப்பிட்டிய உட்பட நீர்கொழும்பில் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.