;
Athirady Tamil News

ராஜபக்ஷ குடும்பத்திற்கும் ரணிலுக்கும் உள்ள தொடர்பு? (வீடியோ)

0

புதிய பிரதமர் நியமனம் தொடர்பான எதிர்பார்ப்பு ஆரம்பதிலேயே கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரருடன் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்க தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்க என்பவர் எப்போதுமே ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்றுபவர். அவர் அவர்களின் பாதுகாப்பிற்காக ஆட்சிக்கு வருகிறார். அதுபோலவே, ராஜபக்ஷமார்களும் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாவலர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் அதைத் தான் காண்கிறோம்´´ என்றார்.






You might also like

Leave A Reply

Your email address will not be published.