இந்தியாவின் உடனடி உதவி !!

இலங்கைக்கு உடனடியாக 65 ஆயிரம் மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை வழங்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் குறித்த யூரியா உரத் தொகை வழங்கப்படவுள்ளதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், குறித்த உதவி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நடப்பு நெற்பயிர்ச்செய்கைக்கான மொத்த உரத்தேவை இதனூடாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.