;
Athirady Tamil News

எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறையுமா?

0

எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க தயாராக இருப்பதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கொள்கைக்கு அமைவாக இந்தக் கட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

தேசிய பஸ் கட்டணக் கொள்கையில் கூறப்பட்டுள்ளபடி டீசல் விலை 4% அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நிச்சயமாக பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உரிய முறையில் எரிபொருள் வழங்கினால் பஸ் கட்டணத்தை குறைக்க தயார் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.