;
Athirady Tamil News

வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க மத்திய அரசு முயற்சி- பிரதமர் மோடி..!!

0

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: கால்பந்து போட்டியில் விதிகளுக்கு எதிராக செயல்படும் வீரர்கள், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அதே போல் கடந்த 8 ஆண்டுகளாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த வளர்ச்சியின்மை, ஊழல், அமைதியின்மை போன்ற அனைத்து தடைகளுக்கும் எனது அரசு ரெட் கார்டு வழங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை பிரிக்கும் முயற்சிகளையும் அகற்றியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களில் மேம்படுத்தப்பட்ட விமான சேவை இணைப்பு, வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்ய உதவுகிறது, இது விவசாயிகளுக்கு பயனளிக்கிறது. அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்டு வருவதுமே அரசின் இறுதி இலக்காகும். ஊழல், பாகுபாடு, வன்முறை மற்றும் வாக்கு வங்கி அரசியலை ஒழிக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டு வளர்ச்சிக்கு மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இன்று உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறுவதை போன்று உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளை நாங்கள் நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், அந்த விளையாட்டு போட்டியில் எங்கள் மூவர்ணக் கொடி உயரத்தில் பறக்கும், அப்போது எங்கள் சொந்த அணிக்காக நாங்கள் ஆதரவு குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.