;
Athirady Tamil News

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது.!! (படங்கள்)

0

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணியளவில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.

மணிவண்ணன் அணி, ரெலோ, புளொட் ,ரெமீடியஸ் தவிர்ந்த ஈபிடிபி உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

சபையின் ஆரம்பத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்திபன் சட்டவிரோதமாக முதல்வர் தெரிவு இடம் பெற்றுள்ளது. எனவே இந்த விடயத்தினை தற்போதுள்ள முதல்வர் கருத்தில் எடுக்க வேண்டும் என தெரிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.