;
Athirady Tamil News

மௌன அஞ்சலி செலுத்துங்கள்: ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை !!

0

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காக, இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று முற்பகல் விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.

அதேநேரம், தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நீர்கொழும்பு – கட்டுவாபிட்டி தேவாலயத்திலும், விசேட ஆராதனை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு – மென்ரசா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய சியோன் தேவாலயத்தில் இன்று காலை விசேட ஆராதனையுடன், அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.