;
Athirady Tamil News

கட்டுவபிட்டிய தேவாலயத்தில் விசேட ஆராதனை !!

0

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்று 21 ஆம் திகதி 4 வருடங்கள் நிறைவடைவதையிட்டு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் முதல் நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயம் வரை காலை 8 மணி முதல் 8 .45 மணி வரை மக்கள் கைகோர்த்து அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது கத்தோலிக்க மத தலைவர்கள், கத்தோலிக்க மக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் இன்று (210காலை விசேட ஆராதனை இடம்பெற்றது.

ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தாக்குதல் இடம் பெற்ற போது கட்டுவபிட்டிய தேவாலயத்தில் வைத்து காயம் அடைந்தவர்களும், சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுடைய உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.