;
Athirady Tamil News

தேசிய கீதம் பாடிய பாடகி பிரதமரின் பாதம் தொட்டு மரியாதை!!

0

அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஆகிய பாடல்களை பாடி இந்தியர்களிடையே மேரி மில்பென் ஏற்கெனவே மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் இந்திய தேசிய கீதம் பாடிய பிறகு மேரி மில்பென், பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது பாதம் தொட்டு வணங்கினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இகுறித்து அவர் கூறும்போது, “தொடர்ந்து 4 அமெரிக்க அதிபர்களுக்கு அமெரிக்க தேசிய கீதம் பாடிய நான், பிரதமர் மோடிக்காக இந்திய தேசிய கீதம் பாடுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.