;
Athirady Tamil News

முதலையை திருமணம் செய்த மெக்சிகோ மேயர்!!

0

மெக்சிகோ நாட்டில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயராக இருந்து வருபவர் ஹியூகோ சாசா. இந்த நகரத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அவர்களிடம் பழமையான பழக்க வழக்கங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் மேயர் ஹியூகோ சாசா முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டது போல காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் முதலைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திருமணம் முடிந்ததும் மேயர், அந்த முதலைக்கு முத்தமிட்டார். பழங்குடியின மக்களின் பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது இயற்கை வளத்தையும், மழை வளத்தையும் பாதுகாக்க வேண்டும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேயர் முதலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.