;
Athirady Tamil News

சமர்ப்பிக்காவிடின் சட்ட நடவடிக்கை!!

0

தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு குறித்த தகவல்களை இதுவரை வழங்கவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களின் தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான தகவல்களை தொழில் அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனும் நிலையில், தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு குறித்த தகவல்களை இதுவரை வழங்கவில்லை.

சொத்துகள் தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஏற்கனவே தொழிற்சங்க தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், எந்தவொரு தொழிற்சங்கத் தலைவரும் இதுவரை அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.