;
Athirady Tamil News

தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி சிறுவன் பலி!!

0

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பணப்புழா ஆலக்காடு வலியப்பள்ளி அருகே உள்ள கல்லடம் பகுதியை சேர்ந்த தம்பதி நாசர்-ஜூபைரியா. இவர்களது மகன் முகம்மது ஜூபைர்(வயது9). சிறுவன் முகம்மது ஜூபைர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தை நாசர் வெட்டி அகற்ற முயன்றார். அப்போது அந்த மரம் நாசர் வீட்டின் மீது விழுந்தது.

அந்த இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவன் அங்கிருந்து மீட்கப்பட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பின்பு மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.