;
Athirady Tamil News

மேலும் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா..!

0

விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய பல நாடுகள் போட்டிபோடுகின்ற வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது.

அந்த வகையில் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

க்யான்குன்-1 மற்றும் ஜிங்ஷிடாய்-16 என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள்கள் செரெஸ்-1 வகை ரொக்கெட் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த ரொக்கெட்டின் 6-வது பயணம் இதுவாகும்.

இந்த செயற்கைக்கோள்கள் தற்போது சரியான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.