;
Athirady Tamil News

பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகள் இருப்பதை டெல்லி அரசு உறுதி செய்யும்- முதல்வர் கெஜ்ரிவால்!!

0

டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:- நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று பி.ஆர். அம்பேத்கர் எப்போதும் கூறிவந்தார்.

அவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் வெளிநாட்டில் இருந்து சிறந்த கல்வியைப் பெற்றவர். டெல்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் இப்போது அங்கு படிக்கிறார்கள். கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.