;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

0

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்றைய தினம் (03) கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் குறித்த கைது இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்தில் குறித்த சந்தேக நபரை சுற்றி வளைத்த பொழுது 500 போதை மாத்திரை கிடைக்கபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளத்தை சேர்ந்த 23 வயதான குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.