;
Athirady Tamil News

அமெரிக்க டிரோனால் கருங்கடலில் பரபரப்பு – தயார் நிலையில் ரஷ்யா! !

0

ஐரோப்பாவின் முக்கிய கடலான கருங்கடலில் சென்ற அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது.

கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்துவதற்காகவும் ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்துள்ளது.

இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க டிரோன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு டிரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்றுக்கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கப்பல் மீது தாக்கியதாகவும் உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.