;
Athirady Tamil News

ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் புறப்பட்டு சென்றார்!!!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி வருகிறார்.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் என இரு முறை சென்றும் லடாக் பகுதிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று காலை காஷ்மீர் புறப்பட்டு சென்றார். லடாக் மற்றும் அங்குள்ள லே பகுதிகளுக்கு அவர் செல்கிறார். இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி அடுத்த மாதம் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், நார்வே, பிரான்சுக்கு செல்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.