;
Athirady Tamil News

மழைநீர் வடிகால் பணி – முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு!!

0

மழைக் காலங்களில் நகர் முழுக்க மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்தாகவே பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார். முதலமைச்சரின் திடீர் ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.