;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தான் தங்க சுரங்க இடிபாட்டில் சிக்கி மூவர் பலி !!

0

ஆப்காகிஸ்தானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் சுமார் 3 பேர் பலியாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்விபத்து சம்பவமானது, ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் தங்க சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுக்கும் பணிகள் இடம்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கமான பணிகளில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டு கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதனில், சுரங்கத்தில் புதையுண்டு மூச்சுத்திணறி 03 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.