;
Athirady Tamil News

சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு !!

0

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (​31) உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியை சேர்ந்த , செனவிரட்ன (வயது 27) என்பவர்கடந்த 25ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை, கனரக வாகனம் ஒன்றுடன் விபத்துக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.