;
Athirady Tamil News

வியட்நாமில் பயங்கர தீ விபத்து: 12 பேர் பலி, 50 பேர் காயம்!!

0

வியட்நாமின் தலைநகர் ஹனோயிலுள்ள 9 அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்குண்டு 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 50-இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்

தீயணைப்புப் படையினரின் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் வெற்றிகரமாக தீ அணைக்கப்பட்டுள்ளதுடன், தீவிபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

மீட்புப்பணிகள் தொடரும் நிலையில்,உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

150 பேர் வசித்து வருகின்ற குறித்த கட்டடத்தில், தீ விபத்திலிருந்து இதுவரை 70 மீட்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தோர் தவிர 54 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கட்டடத்தில் திடீரென தீ பரவியதாகவும் அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் மக்கள் கூறியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.