;
Athirady Tamil News

45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது !!

0

பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதான பாடசாலை அதிபர், நீதிபதி ரம்ஷா நவைத் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பெண்களும் சாட்சியம் அளித்தனர்.

வேலை தருகிறேன் என தெரிவித்து பாடசாலைக்கு பெண்களை அழைக்கும் அதிபர், கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த இரண்டு பெண்களும் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்

குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.