;
Athirady Tamil News

தாய் வெளிநாடு சென்ற நிலையில் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி

0

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வீட்டு வேலை செய்ய தாய் சென்ற பின்னர் மூன்று பிள்ளைகளையும் கொடூரமாக நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான தந்தை, பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மூன்று பிள்ளைகளும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பொலிஸ் பொறுப்பில் வைக்க பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

பொலிஸ் பாதுகாப்பில் பிள்ளைகள்
சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இந்த மூன்று பிள்ளைகளின் தேவைகள் அனைத்தும் அந்த பணியகத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் தமது சொந்த செலவில் பூர்த்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தந்தையும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.